Wednesday, October 14, 2009

சாயம் வெளுத்தது


இலங்கை - இலங்கையில் தலைமாநகரத்தில் ஒரு கண் கொள்ளாக் காட்சி. தமிழனத்தலைவர்கள், இலங்கை சென்றதற்கான காரணம் ஒரு புகைப்படைத்த பார்த்த மாத்திரத்தில் தெளிவாகப் புரிந்தது.


தமிழ்க் காவலர், தமிழினக்காவலர், நெஞ்சுக்கு எக்காலமும் நீதி தேடிக்கொண்டே இருப்பவரின், நேரடி மேற்பார்வையில், இலங்கை சென்ற தமிழினத் தலைவர்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவை நேரில் பார்த்து நீதி கேட்டார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமான தமிழின உயிர்களை கொன்று குவித்ததுக்குப் பாராட்டாக, ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார்கள். ஆரத்தழுவி இன்புற்றார்கள்.


தமிழனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். யாருக்கு என்ன வந்தது? உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக பரவி இருக்கும் தமிழினம் செத்தொழியட்டும். தமிழ் நாட்டுத் தமிழனுக்கு என்ன அக்கறை? கலைஞர் ஆட்சியில் கிடைத்த இலவச தொலைக் காட்சிப் பெட்டி பெற்று, சூரத் நமிதாவையும், மற்றும் பல்வேறு மாநில வெள்ளைத்தொல்களையும், கண்டு கைதட்டி மகிழட்டும். எந்தத்தமிழன் எங்கு செத்தால் இவர்களுக்கென்ன. இலவசப் பொருள் சமுதாயம் பெருகி வளரும்போது, மொழி உணர்வு, இன உணர்வு, மனித நேயம் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. தன்மானம் என்பது பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே.




விருந்து முடிந்த பின் விழுந்த இலைகளை
நக்கிடும் நாய்க்கும் நாளொன்று கழியும்,
நாளைக்க கழிப்பதே நானிலப் பிறப்பெனில்........................





தலைவர் நெஞ்சுக்கு நீதி தேடி விட்டார். கழகங்களின் சாயம் மற்றுமொருமுறை முழுமையாக வெளுத்து விட்டது.







No comments: