Wednesday, October 21, 2009

எல்லாம் நன்றாகவே நடக்கின்றன

சுதர்சன் நாச்சியப்பனும், அருணும், தெளிவாகச்சொல்லிட்டாங்கைய்யா, எல்லாம் நல்லபடியா இருக்கு. முகாம்கள்ள இலங்கைத் தமிழ் மக்கள் வசதியா இருக்காங்க. நாங்க இதெல்லாம் பத்தி முழு ரிப்போர்ட்டு மன்மோகன் சிங்கு கிட்டயும், சோனியா அம்மாக்கிட்டயும் குடுக்கொறோம்னு சொல்லிட்டாங்க.


திரை விலகாமலே ஒரு நாடகம் நடந்தது
நடிகர்கள் மேடையில் அல்ல, பார்வையாளர் புறம்
பார்த்தார்கள், ரசித்தார்கள், பொன்னாடை போர்த்தி
பாராட்டினார்கள், கொலையாளன் குதூகலிக்க
மேடையில் ஓடிய ரத்த ஆற்றை கண்டும் காணாமல்
திரும்ப வந்து, ஈவிரக்கம் சிறிதுமின்றி பொய் வார்த்தை பேசுகிறார்கள்
கடவுளின் நாடகத்தில் இவர்கள் பாத்திரங்கள்
பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்,
பிரதமரிடமல்ல, இவர்களைப் படைத்தவனிடம்

No comments: