Tuesday, October 20, 2009

திருமாவளவன் என்று ஒரு தமிழ்த் தலைவர்

தமிழன் நான், தமிழன்பன் நான் இன்று காலை தினமலர் செய்தித்தாளைத் திறந்து இலங்கை சென்றிருக்கும் நம் தமிழ்த் தலைவர்களைப் பற்றிய செய்தி படித்ததும் மெய் சிலிர்த்தேன், புல்லரித்துப் போனேன், புளகாங்கிதம் அடைந்தேன். இன்னும் என்னென்னவோ சொல்லத் தோணுது. இத்தோட நிறுத்திக்கிட்டா தமிழ் தலைவர்களுக்கும் நல்லது. எனக்கும் ரொம்ப நல்லது.


நியூச கேளுங்க. இலங்கைத் தமிழினக் கொல்லி ராஜ பக்சே திருமாவளவன் எனும் தமிழ்த்தலைவனை ஆரத்தழுவிக்கொண்டான். மேலும் சொன்னான்:
" நீங்கள் பிரபாகரனோடு தொடர்ந்து இருந்திருந்தால் நீங்களும் அழிந்திருப்பீர்கள். நல்ல வேளையாக தப்பித்துக்கொண்டீர்கள்"



இதைக்கேட்டதும் உடனிருந்த தமிழக எம்.பி. க்கள் அச்சமடைந்தனர், என்ன நடக்குமோ என்று. ஆனால் தமிழ்த்தலைவர், தன்மானச்சிங்கம், சிறுத்தை, புலி, (காட்டு மிருகங்கள் பேர வைக்கறதுதான் இப்ப ஃபேஷன்) சிறிதும் கலங்காது, எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்தார். என்னவொரு காட்சி. இந்த செய்தியை படித்த பிறகும் புல்லரிப்புப் பத்தலைன்னா வகதா.டிவில நுழைஞ்சு தானைத் தலைவன் திருமாவளவன் பேச்சை வீடியோ வில கேட்டுப் பாருங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல புல்லரிச்சுப்போயி சொறிஞ்சிக்கிட்டே இருப்பீங்க.


இதுக்கும் மேலாக எனக்கு என்னுடைய சிறு வயது நண்பன் ஞாபகம் வந்தது. அவன் எந்த ஊர் வம்புக்கும் போக மாட்டான். ரொம்ப பயந்த குணம். ஒரு நாளைக்கு ஒரு சின்ன சண்டை. எதிராளி அவன ஓங்கி அறைஞ்சிட்டான். உடனே வெகுண்டு எழுந்த என் நண்பன் "எனக்கு கோபம் வந்தா என்ன செய்வேன் தெரியுமா?" என்று கேட்கவும், நாங்கள்ளாம், பயத்தோட பாத்துக்கிட்டு இருந்தோம். ஏன்னா, என் ஃபிரெண்ட அறைஞ்சவன் ரொம்ப மொரடன். என் ஃபிரெண்டு ரொம்ப நிதானமா கன்னத்த தொடச்சிக்கிட்டு சொன்னான் "பொறுத்திக்கிட்டு போயிடுவேன்" னு. பல நாட்களுக்கு அந்த ஜோக்க நாங்க சொல்லி சிரிச்சிக்கிட்டே இருப்போம். இது இப்ப ஞாபகம் ஏன் வருதுன்னு சத்தியமா தெரியாதுங்க எனக்கு.


No comments: