Saturday, October 10, 2009

நல்லதை எழுது

நான் சொன்னது "கெட்டதை எழுதுகிறேன், நல்லவை நடக்க எழுதுகிறேன்"


சந்தேகம் இருந்தால் இன்று தினமலர் செய்தித்தாளை எடுத்துப் படித்துப் பாருங்கள். மூன்று சதவித மக்கள், இந்நாட்டில் கொள்ளை கொள்ளையாக கறுப்புப்பணத்தை அமுத்துகிறார்கள். இதில் பெரும்பாலோர், ஊழல் அரசு அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், மற்றும் அவர்களோடு கைகோர்த்து நாட்டிற்கு இன்னலூட்டும் வியாபாரிகள். இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஐந்து சதவிகிதத்திற்கு இணையாக குறைத்து விடுகிறார்கள்.


அதன் உண்மையான வெளிப்பாடு எங்கே என்று கேளுங்கள். நாம் அன்றாடம் உண்ணும் அரிசியிலும், பருப்பு வைகைகளிலும், ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கிறது.



கூட்டிக் கழித்துப் பார்த்தால், நமது இந்திய நாட்டில், ஊழல் நடவடிக்கைகளை நாம் அறவே ஒழித்தால், சாமானிய மனிதனின் வாழ் நிலை பல படிகள் உயரும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தினம் உழைத்து சம்பாதிக்கும் சாமானிய மனிதனின் வரவு குறைந்தது பதினைந்து சதவிகிதம் உயரும். அத்தியாவசிய செலவுகள் அதாவது உணவு, உடை, இருப்பிடம், வாகனம் வாங்கும் செலவு, பதினைந்திலிருந்து இருபது சதவிகிதம் குறையும்.



என்று நமது இந்திய மண்ணில் ஒவ்வொரு சாமானியனும் இதை உணர்கிறானோ, இதை உணர்ந்து வெகுண்டு எழுகிறானோ, அன்று, நாம் ஒரு புதிய சுதந்திரப் போராட்டத்திறகு தயாராகி விட்டோம் என்று கொள்.


நான் தயார்! நீ தயாரா? ஆனால் நினைவில் கொள் "Non Violence is the best form of Bravery"


No comments: