Saturday, October 10, 2009

நல்லதை எழுது

நம்ம ஃப்ரெண்டு ஒத்தன் - அவன நானும் விடாப்புடியா "தமிழன்பன் படிச்சியா, தமிழன்பன் படிச்சியா?" ன்னு நொய்க்க அவனும் தொந்தரவு தாங்காம படிச்சுட்டு
"பொறம்போக்கு! பொறுக்கி" அப்படின்னு கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சான்.




ஏன்டா, நல்ல விழயங்கள நான் எழுதறேன். என்ன ஏன்டா திட்டறே" என்று கேட்கவும், கை நீட்டாத குறையா
"எதுடா நல்ல விஷயம். நல்லவங்களப்பத்தி எழுதினா நல்ல விஷயம். எப்பப் பாத்தாலும், எடுபட்ட அரசியல்வாதிகளப்பத்தி எழுதறியே, எதுடா நல்ல விஷயம், வாய்ல வந்துடப் போவுது" என்று காய்ச்சினான்.




நான் சொன்னேன் "ஏன்டா, நல்ல விஷயத்தப் பத்தி நான் எழுதலையா! டெல்லி மெட்ரோ ரெயில் உருவாவதர்க்குக் காரண கர்த்தா ஸ்ரீதரன் பத்தி எழுதலையா."
"ஆமான்டா எழுதின, நீ எழுதி பத்து நாளைக்குள்ள பெரிய ஆக்சிடெண்டு ஆயி அவுருக்கும் டென்ஷன். ஏன்டா இப்படி பண்றே" என்று கண்டித்தான்.




சமீபத்தில் மேதகு அப்துல் கலாம் பேசியதாகக் கேள்விப்பட்டேன். அவ்வுரையில் அவர் இந்தியாவில் எவ்வளவோ சாதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், மற்றும் பல சாதனங்களும் இந்தியாவின் அவலங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன. இது தவறு என்று.
யோசித்துப்பார்த்தேன். நான் இந்தியாவின், மற்றும் உலக அவலங்களைப் பற்றி மட்டுமே அதிகம் எழுதுகிறேன். ஏன்? தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

No comments: