Saturday, October 17, 2009

செத்து மடிந்தது தமிழ் இன உணர்வு

கடல் கடந்து சென்றான் தமிழன் கனவுகளுடன்
கால மாலை பார்க்காது உழைத்தான் வயிறு கழுவ
தாய் மண்ணை மறந்து, சென்ற இடம் தன்னிடமாக்கி
தான் தமிழன் என்று மறவாது, தமிழ் மட்டும் பேசி
அந்நிய மண்ணில் தமிழ் தழைக்க விரும்பினான்



மணம் முடித்து, குழந்தைகள் பல பெற்று வளங்கள்
மனம்போல் பெற்றான் பற்பல - பொறுக்காத சிங்களவன்
பாவங்கள் பல புரிந்தான், தமிழ் மாதர் தம் குலத்தை
பரிதவிக்க விட்டு காட்டாட்ச்சி நடத்தினான்.


ராஜபக்சே என்னும் கொடுங்கோலாளன் தருணம்
பார்த்து அரங்கேற்றினான் ஒரு நாடகத்தை
விடுதலைப் புலிகளை முடிக்கிறேன் என்ற பெயரில்
நடத்தி முடித்தான் தமிழ் குல வேரறுப்புச் செயல்


தமிழ்க் குலக் காவலெரன, நாள் தோறும் மேடை போட்டு தன்மானத் திரையில் நாடகம் போட்டு ஏமாற்றினார்கள் தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள்.


குளிர்சாதனப் பெட்டிகளும், ஒன்றுக்கும் மேலான துணைவியாரும் சுற்றிருக்க சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்குமிடையே உண்ணா நோன்பு இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளில் வியாபாரம் செய்தார்கள்


கூடிய விரைவில் எதிர் பாருங்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தமிழ் நாட்டில் அண்ணா விருது, பெரியார் விருது போல், கலைஞர் விருது கொடுத்து விழா எடுப்பார்கள். தமிழனுக்கு எதையும், எந்த கண்றாவியையும் தாங்கும் இதயம் உண்டு.

No comments: