Thursday, October 22, 2009

தோத்துப் போனார் அருண் காவ்லி

மும்பை மாநகரத்தில் அருண் காவ்லி என்னும் ஒரு காவாலி. குற்றங்கள் பல புரிந்து பல வருடங்கள் காவலில் வைக்கப்பட்டவன். இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் போக்கிடம் எது? அரசியல் தானே. அதனால் அவன் ஒரு கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதியானான். இரண்டாயிரத்து நான்காம் வருடம் 'அகில பாரதிய சேனா" என்ற அரசியல் கட்சியின் கீழ் எம்.எல்.ஏ. ஆனான்.


அரசியல்
வாதி ஆகி, சட்டசபைல இடம் புடிச்சிட்டா எவனுக்குமே பரிபூரண விமோசனம் அல்லவா கிடைச்சுடும். போலீஸ் பாதுகாப்பு உண்டு. நேரடியா அடிதடி செய்யறத சட்டசபைல மட்டும் வச்சுக்கலாம். தெருவுல அதைச்செய்ய உடன்பிறப்புகள் பல பேர் இருப்பாங்க. கொலையே செய்து மாட்டிக்கிட்டாலும், எதிர் கட்சியின் சதி என்று பழி போடலாம். கூட்டத்தைக் கூட்டி, அராஜகம் செய்து, நீதியை (அநீதியை) தனக்கு சாதகமாக்கலாம். ஆட்சி மாறினால் தான் கட்சி மாறி, குற்றங்களிலிருந்து தப்பித்து, மனித குல சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ளலாம்.


ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்மணிகளை மணம் முடிக்கலாம். அவர்கள் தம் பெண், பிள்ளைகளுக்கு, ஸ்டேட்டிலிருந்து, சென்ட்ரல் வரை பதவிகள் பல பெறலாம். மாமன், மச்சான் என்று விரிந்த குடும்பங்களுக்குப் பற்பல நன்மைகள் செய்யலாம். மொத்தத்தில் மக்கள் வரிப்பணத்தை தங்கள் குடும்பச் சொத்தாகக் கருதி, பித்தலாட்டங்கள் பல செய்து பிழைக்கலாம்.


ஆனால் இந்த முறை தோத்துப் போனார் அருண் காவ்லி. இருந்தாலுமென்ன, ஆட்சியல் அமருபவனுக்குக் கிடைப்பதில் கொஞ்சம் கமிஷன் அரசியலில் மற்றவர்களுக்கும் கிடைக்கும். அத வச்சு அடுத்த எலெக்ஷன் வரைக்கும் ஓட்டலாம்.

No comments: