Sunday, October 25, 2009

எதிர்க்கட்சிங்க மட்டும் தோக்கல

அண்ணாச்சி! மஹாராஷ்டிரத்திலயும், அருணாச்சலப் பிரதேசத்திலயும், மக்கள் எதிர் கட்சிகள எப்படி தோக்கடிச்சுட்டாங்க பாத்தீங்களா?


தோத்தது எதிர்கட்சிங்கதான்! ஆனால் அவுங்க கூடவே மக்களையும் தோக்கடிச்சுட்டாங்க!


புரியலீங்கண்ணே! மக்கள் எப்படித் தோத்தாங்க?





இப்ப இருக்கற மத்திய காங்கிரஸ் கவர்ன்மேண்டப் பத்தி நீ என்ன நெனக்கிறே?


நல்ல கவர்ன்மேண்டு தானேண்ணே!


என்னடா நல்ல கவர்ன்மேண்டு? எத்த வச்சு சொல்ற? ஆரம்பத்துல சிங்கு அய்யாக்கிட்ட கேட்டப்போ "இவ்வளவு, கிரிமினல் கேசு இருக்கறவங்களோடல்லாம், நீங்க கூட்டு வச்சிருக்கீங்களேன்னு" கேட்டப்போ "என்ன பண்றது? ஆட்சி நடத்தணுமே" ன்னு சொன்னாரு.


இப்ப நிலைமையப் பாரு! சீனா அருணாச்சலப் பிரதேச விஷயத்துல நம்மள ஓபெனா சாலேஞ்சு பண்ணுது. பாகிஸ்தான் மும்பை தாக்குதல் விவகாரத்துல நியாயமா நடக்க விரும்பற மாதிரி சுத்தமாத் தெரியல. இலங்கை ராஜ பக்சே செய்யறதெல்லாம் செஞ்சுட்டு, தமிழ் நாட்டையும், இந்தியாவையும் பாத்து கொக்கொரக்கோ ன்னு கூவறான்.


இதெல்லாம் பத்தாதுன்னு, நாட்டுக்கு உள்ளேயே, நாக்சலைட்டுகளும், மாவோவிஸ்டிகளும், இந்திய அரசுக்கு எதிரா போரறிக்கையே குடுக்குறாங்க. சரி, பார்லிமெண்டுக்குள்ள போயி பாப்போம். உள்துறை அமைச்சர், மறு எண்ணிக்கையில் ஜெயிச்சவர். உண்மை என்னன்னு சிலருக்குத் தான் தெரிஞ்சிருக்கும். ஆனா வதந்திகள் பல. நம்பவும் முடியல. முழுவதுமா நம்பாமலும் இருக்க முடியல. ஏன்னா அவுங்க கூட்டாளிங்க அப்படி. ராஜான்னு இன்னொரு மந்திரி. பல புகார்கள். மறுபடியும் புகைய ஆரம்பிச்சிருக்கு. எரிஞ்சாலும் எரியும், அப்படியே அணைஜ்சாலும் அணைஞ்சுடும். எல்லாம் அவுங்க அவுங்க அட்ஜஸ்மேன்டப் பொறுத்தது. ஜகத் ரக்ஷகன்ன்னு இன்னொருத்தருப்பா, டோனஷன் கேசு, எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சின்னப் புள்ளைங்க மாதிரி பேசி குஷாலாயிட்டாறு. அத்த வுடு, நம்ம மதுரக்காரரு, அழகிரி, அவுருக்கு என்ன அனுபவம்? கலைஞரோட மகன் என்கறது விட்டு என்ன? மொத முரையே மினிஸ்டர் ஆயிட்டாரு. இன்னும் எவ்வளோவோ சொல்லிக்கிட்டே போலாம்.



இந்த மாதிரி நேரத்துல உஷாரா ஒரு எதிர்க்கட்சி இருந்து உருப்படியா வேலை பண்ணிருந்தாங்கன்னா, எல்லா சீட்டையும், அப்படியே அள்ளியிருக்கலாம். உள்ளுக்குள்ளேயே ஒத்தொனுக்கு ஒத்தன் அடிச்சிக்கிட்டு எல்லாரும் வீணாப் போனாங்க. அதனால தம்பி தோத்தது எதிர்கட்சிகள் இல்ல. மக்கள்.


No comments: