Thursday, October 22, 2009

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்

தினம் தினம் தமிழ் செய்தித்தாள்களில், தங்களைப் பற்றிய செய்தியோ, தாங்கள் பேசியோ பேச்சோ பதிவாகியிருக்கும். நாட்டுக்கு நலன் பயக்கும் விஷயங்கள் எதுவும் யோசித்துப் பேசுவீர்கள் என்று பார்த்தால் பெரும் ஏமாற்றம் தான். பாவம் உங்கள் சங்கடம் எங்களுக்கும் ஓரளவு புரிகிறது. தினம் தினம், அதற்கு முந்தைய தினம் ஜெயலலிதா என்ன பேசினார் என்று படித்துப் புரிந்து கொள்வதிலேயே, இந்த தள்ளாத வயதில், பெரும் நேரமும், அதிக அளவில் மனோ வலிமையையும் செலவிட வேண்டியதாக இருக்கும். அதற்கும் மேலாக தெள்ளிய தமிழில் பதிலடி அடிக்க, மேலும் யோசித்தே நாள் கடந்து விடும்.


விட்டுத்தள்ளுங்கையா ஜெயலலிதாவின் பேச்சை! உண்மையாச் சொல்றேன், நீங்க சொல்றது வச்சுத்தான், செல்வி ஜெயலலிதா என்ன பேசினாங்கன்னு தெரிய வருது. நீங்க ஜெயலலிதாவை எதிர்க்கிறீங்களா, அல்லது அவங்க பேச்சுக்கு விளம்பரம் குடுக்கறீங்களான்னே சந்தேகம் வந்துடுது.


எனவே நீங்க பாட்டுக்கு சிவனேன்னு, மன்னிக்கணும், வெங்காயமேன்னு, நெஞ்சுக்கு நீதி தேடறதிலேயே முழு நேரம் ஈடுபட்டா நல்லா இருக்கும். நீங்க உண்டு, உங்க சக்கர நாற்காலி உண்டுன்னு ஒய்வு எடுங்க. தமிழ் நாட்டுல பெரிய மாத்தம் ஒண்ணு்ம் வந்துடாது.


வாழ்க தமிழ்! வளர்க தலைவர் குடும்பம்!

No comments: