Wednesday, October 28, 2009

ராஜா கைய வச்சான்

ராஜா கைய வச்சான்! அது ராங்கா போனதில்லே!


என்னடா, காலங்காத்தால பாட்டுப் பாடி கலக்க ஆரம்பிச்சிட்டே?


சும்மா, இந்த பாட்டு ரொம்ப நாளைக்கு அப்பறம் ஞாபகம் வந்திச்சு, எடுத்து வுட்டேன் அண்ணே!


அது சரிடா, இந்த பாட்டு ஏன் உனக்கு ஞாபகம் வந்திச்சு? எந்த ராஜாவைப் பத்தி ஞாபகம் வந்திச்சு? பட்டி மன்றம் ராஜாவா? பெருந்துறை ஆள்கடத்தல் கேசு ராஜாவா? இல்ல தினம் தினம், உடாம உடும்புப்புடியா தப்பு ஒண்ணும் நடக்கல, கீழ்மட்டத்துல தப்பு நடந்திருந்தா சி.பி.ஐ. தன் வேளையைச்செய்யும்னு, பரிதாபமா பதில் சொல்லிக்கிட்டு இருக்காரே சென்ட்ரல் மினிஸ்டரு ராஜாவா?


குறிப்பா யாரைப்பத்தியும் பாடலேண்ணே. ஆனா நேத்து திடீர்னு ராஜா கைதாவாரான்னு படிச்ச வொடனே திக்குன்னு ஆயிடிச்சு. என்னடா இது, டில்லி மாநகரத்துல ராசா சம்பத்தப்பட்ட ஆஃபீஸுங்கள்ள சி.பி.ஐ. ரெய்டு நடந்துருக்கு. அடுத்த நாள் தினமலர் பேப்பரைத் தொறந்தா, ராஜா கைதாவாரா ன்னு படிச்சதும் திக்குன்னு ஆயிடிச்சு அண்ணே!



அர வேக்காடு! எதையும் முழுசா படிச்சுப் பாக்க வேண்டாம்.


படிச்சப்பறம் தான்னே தெரிஞ்சுது, இவுரு வேற ராஜா, ஆள் கடத்தல் ராஜா. பெருந்துறை ராஜான்னு. ஏண்ணே? எனக்கு ஒரு விஷயம் புரியலண்ணே. இந்த ஆள்கடத்தல் கேசு ராஜா, பல வருஷம் பார்டில இருந்திருக்கிறாரு. அவுங்க அப்பாவும் கட்ச்சிக்காரரு. கட்சில பதவிகள்ல இருந்திருக்காரு. ஒரு காலத்துல மினிஸ்டராவும் இருந்திருக்காரு. எப்படின்னே திடீர்னு இப்படி ஆயிப் போச்சு?



அது தாண்டா பாலிடிக்சு! பல தடவைல கிறுக்குத்தனமா மாட்டிக்கிட்டா குத்தவாளி! சாமர்த்தியமா தப்பிச்சிக்கிட்ட, மினிஸ்டரு, சீஃப் மினிஸ்டரு, ப்ரைம் மினிஸ்டரு, என்ன வேணும்னாலும் ஆகலாம். அது பேரு தாண்டா டெமோக்ரஸி.

வாழ்க இந்தியா! வளர்க அதன் ஜனநாயகம்! ஒழிக கிரிமினல்கள் நாயகம்!
ஜெய் ஹிந்த்!

No comments: