Showing posts with label சந்தேகம் யார் பக்கம். Show all posts
Showing posts with label சந்தேகம் யார் பக்கம். Show all posts

Friday, July 3, 2009

அப்பு குப்பு உரையாடல் 2

அப்பு: செல்வி உண்மையை போட்டு உடைச்சிட்டாங்க பாத்தியா.

குப்பு: எந்த செல்வி? எந்த உண்மை?

அப்பு: செல்வின்னா எந்த செல்வின்னு உலகத்துக்கே தெரியும். தமிழ் நாட்டுல இருக்கிற உனக்கு தெரியலையே! சரி போகட்டும். எந்த உண்மைன்னு வேற கேக்கற. ஒரு உண்மைதான் இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சாகணும். அது நீதிபதி அய்யா ரெகுபதி சொன்ன அமைச்சர் யாருங்கறதுதான்.

குப்பு: அவுங்க சொலறது உண்மைன்னு உனக்கு எப்படி தெரியும்?

அப்பு: குப்பு. நீ விவரமே தெரியாத ஆளுய்யா. நம்மூரு அரசியல்ல எதிரெதிர் கட்சில இருந்தாலும், அங்க நடக்கறது இங்க தெரியும், இங்க நடக்கறது அங்க தெரியும். இன்னும் தெளிவா சொல்லனும்னா, தி.மு.. விஷயம் கலைஞருக்கு தெரியரதுக்கு முன்னாடியே செல்விக்கு தெரிஞ்சுடும். அதே போல, ...தி.மு.. விஷயம், செல்விக்கு தெரியரதுக்கு முன்னமே கலைஞருக்கு தெரிஞ்சுடும். இது பேரு தான் அரசியல்.

குப்பு: அப்ப செல்வி ஜெயலலிதா அவுங்க சொல்றது சரிதாங்கரீயா? அமைச்சர் ராஜா தான் குற்றவாளிங்கரீயா?

அப்பு: விஷயம் நீதித் துறையிலேருந்தோ, அமைச்சகதிலேருந்தோ வர வரைக்கும் முடிவா எதுவும் சொல்ல முடியாது. ஆனா, அமைச்சர் ராஜா குற்றவாளியா இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்கள் நெறைய இருக்கு.

குப்பு: சுவாரசியமா இருக்கே. சொல்லு அப்பு.

அப்பு: குப்பு, வா பக்கத்து கடையில போயி, சூடா ஒரு கப் டீ அடிச்சிட்டு வந்து பேசுவோம்.