Showing posts with label மோதியின் உண்மை உரு. Show all posts
Showing posts with label மோதியின் உண்மை உரு. Show all posts

Friday, July 17, 2009

மோதி ஒரு முற்போக்குவாதி

குஜராத் மாநில முதலமைச்சர் திரு.நரேந்திர மோதி ஒரு முற்போக்குவாதி. பல மாநிலங்களிலும், பற்பல நாடுகளிலும், அவரைப்பற்றிய ஒரு முழுவதும் தவறான எண்ணமே உலாவுகிறது. கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் நடந்த வன்முறை, அவர் தம் அரசால் தூண்டி விடப்பட்டது, மோதி ஒரு மத வாதி, இஸ்லாமியருக்கு விரோதி, இஸ்லாமியரை இந்தியர்களாக ஒப்புக்கொள்வதில்லை, இது போன்று பற்பல குற்றச்சாட்டுக்கள். ஆனாலும் , மீண்டும் மீண்டும் தேர்தல்களில் வெற்றி பெற்று , முதலமைச்சர் ஆனார். குஜராத்தில் பல தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்படுகிறார்.
இரவும் பகலும் அயராமல் உழைக்கிறார். மந்திரிகளுடனும், பல்வேறு அதிகாரிகளுடனும் ஏறக்குறைய அன்றாடம் உரையாடி, மாநிலத்தின் நிலைமைகளை அறிந்து கொள்கிறார். ஒரு தனி மனிதன், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக புரையோடியிருக்கும் மெத்தனத்தையும், ஊழலையும் வேரோடு அறுத்தெறிந்து விட முடியாது. ஆனால் மோதி விடா முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் இது தெளிவாகத் தெரிகிறது.
அவருக்கு, மூன்று என்ன, ஒரு மனைவி கூட இல்லை. மகன்கள், மகள்கள் இல்லை, மைத்துனர்கள் இல்லை. அவர்களுக்காக பதவிகள் வேண்டி நாட்டின் பிரதம மந்திரி தலைவாயிலில் மண்டி போட்டு மன்றாட வேண்டியது இல்லை.
சமீப காலங்களில் அவர் தன் உண்மை நிலையை வெகுவாக வெளிக்கொணர ஆரம்பித்து விட்டார். அவரது தாரக மந்திரம், கர்வமான குஜராத்தின் வளர்ச்சி. அதற்கு வேண்டியது திறமைசாலிகள். எத்துறையாயிருந்தாலும் சரி. எந்த மாநிலத்தவராயிருந்தாலும் சரி. எம்மதத்தினவராயிருந்தாலும் சரி. மூன்றாம் முறை முதலமைச்சரானதும், இஸ்லாமியர் ஒருவரை, மாநிலத்தின் தலைமை போலீஸ் அதிகாரியாக நியமித்தார். இப்பொழுது வரவிருக்கும் பஞ்சாயத்துத்தேர்தல்களில் பா.ஜ.பா சார்பில் போட்டியிட ஐந்து இஸ்லாமியரை தேர்ந்து எடுத்து இருக்கிறார்.
மோதி ஒரு மத வாதி அல்ல. அவர் ஒரு ஞானி. அவர் ஒரு தேசப்பற்று கொண்ட குஜராத்தி, மற்றும் இந்தியர். பதவிக்காகவும், பரந்து விரிந்து கிடக்கும் பற்பல குடும்ப உறுப்பினர்களையும், தவறான முறைகளில் கொழுத்த பணக்காரர்களாகவும், உயர் பதவியாளர்களாகவும், ஆக்குவதிலேயே தன் வாழ் நாள் முழுவதையும் கழித்து, பின்னர் தள்ளாத வயதிலும், பதவியைப்பிடித்துக்கொண்டு, இன்னமும் என்னென்ன ஊழல்கள் செய்யலாம் என்று திட்டம் தீட்டும், இந்திய அரசியல்வாதிகள் இடையே மோதி ஒரு இரத்தினம்.